என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஒடிசாவில் இருந்து ஈரோட்டுக்கு வாராந்திர ரெயில் ஈரோடு - மும்பை சிறப்பு ரெயில் ஆகஸ்டு மாதம் வரை நீட்டிப்பு
- ஈரோடு - சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் அடுத்த ஜூலை மாதம் 7-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் மதியம் 1.45 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு மதியம் 2.47 மணிக்கு சேலம் வந்தடையும்.
- திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு நான்டேட் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
ேலம்:
ரெயில்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முக்கிய வழித்தடங்களில் ரெயில்வே நிர்வாகம் அவ்வப்போது சிறப்பு ெரயில்களை இயக்கி வருகிறது. அந்த வகையில் தற்போது ஒடிசா மாநிலம் சாம்பல்பூரில் இருந்து சேலம் வழியாக ஈரோட்டிற்கு சிறப்பு ரெயில் இயக்குகிறது. அதன்படி சாம்பல்பூர் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் (வண்டி எண் 08311) அடுத்த மாதம் (ஜூலை) 5-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை புதன்கிழமைகளில் சாம்பல்பூரில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்பட்டு நெல்லூர், கூடூர், பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக வியாழக்கிழமை மாலை 6.42 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.45 மணிக்கு புறப்பட்டு இரவு 7.50 மணிக்கு ஈரோடு சென்றடையும்.
இதேபோல் மறு மார்க்கத்தில் ஈரோடு - சாம்பல்பூர் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 08312) அடுத்த ஜூலை மாதம் 7-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை வெள்ளிக் கிழமைகளில் மதியம் 1.45 மணிக்கு ஈரோட்டில் இருந்து புறப்பட்டு மதியம் 2.47 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 2.50 மணிக்கு புறப்பட்டு ஜோலார் பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர், கூடூர், நெல்லூர் வழியாக சனிக்கிழமை இரவு 9.15 மணிக்கு சாம்பல்பூர் சென்ற டையும்.
இதே போல சேலம் வழியாக மும்பை நான்டேட்டில் இருந்து ஈரோட்டுக்கும், ஈரோட்டில் இருந்து மும்பை நான்டேட்டுக்கும் வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களின் சேவை ஆகஸ்டு மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நான்டேட் - ஈரோடு வாராந்திர சிறப்பு ெரயில் (வண்டி எண் 07189) நான்டேட்டில் இருந்து வெள்ளிக்கிழமைகளில் மதியம் 2.20 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை மதியம் 12.48 மணிக்கு சேலம் வந்தடையும்.
இங்கிருந்து 12.50 மணிக்கு புறப்பட்டு 2 மணிக்கு ஈரோடு சென்றடை யும். இந்த ரெயில் சேவை காலம் அடுத்த மாதம் (ஜூலை) 7-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது, இதேபோல் மறுமார்க்கத்தில் இயக்கப்படும் ஈரோடு - நான்டேட் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 07190) ஞாயிற்றுக் கிழமைகளில் ஈரோட்டில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6.12 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 6.15 மணிக்கு புறப்பட்டு திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு நான்டேட் சென்றடையும் என்று சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்