search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எடப்பாடி அருகே கோவிலுக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்
    X

    எடப்பாடி அருகே அய்யனாரப்பன் கோவில் பிரதான வாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பக்தர்கள்

    எடப்பாடி அருகே கோவிலுக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்

    • குருக்கப்பட்டி அருகே உள்ள கல்மோட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது.
    • இக்கோவி லின் வரவு -செலவு கணக்குகளை நிர்வாகிப்பது மற்றும் கோவிலை பரா மரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே குருக்கப்பட்டி அருகே உள்ள கல்மோட்டூர் பகுதியில் அய்யனாரப்பன் கோவில் அமைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் புதிதாக புனர மைக்கப்பட்ட இக்கோவிலின் வரவு -செலவு கணக்குகளை நிர்வாகிப்பது மற்றும் கோவிலை பராமரிப்பது தொடர்பாக இரு தரப்பினருக்கிடையே நீண்ட காலமாக மோதல் நிலவி வந்தது. இது தொடர்பாக இரு தரப்பினர்களும் பூலாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இந்நிலையில் கடந்த

    22-ம் தேதி எடப்பாடி தாசில்தார் அலுவலகத்தில், வருவாய்த்துறையினர் முன்னிலையில் சம்பந்தப்பட்ட இரு தரப்பி னருக்கிடையே சமாதான பேச்சு வார்த்தை நடை பெற்றது. இதில் உரிய தீர்வு எட்டப்படாத நிலையில், மீண்டும் இதுகுறித்து சங்க கிரி வருவாய் கோட்டாட்சி யர் முன்னிலையில் சமா தான பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.

    பாதுகாப்பு கருதி சமாதான பேச்சுவார்த்தை நடைபெறும் வரை, இரு தரப்பினரும் சம்பந்தப்பட்ட கோவிலுக்குள் நுழைந்து எந்த ஒரு நிகழ்வுகளும் மேற்கொள்ளக்கூடாது என வருவாய்த்துறையினர் கூறியிருந்தனர். இந்நிலையில் நேற்று சம்பந்தப்பட்ட ஒரு தரப்பினார் திடீரென அயனாரப்பன் கோவி லுக்குள் நுழைந்து தாங்கள் விரதம் இருந்து தவ பூஜை நடத்தப் போவதாக கூறினர்.

    இதற்கு மற்றொரு தரப்பி னர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல் துறை அலு வலர்கள் சம்பந்தப்பட்ட கோவிலின் பிரதான வாயி லுக்கு பூட்டு போட்டனர். இன்று சங்ககிரி கோட்டாட்சியர் அலுவல கத்தில் நடைபெறும் சமா தான பேச்சு வார்த்தைக்கு பின்னரே பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என எச்சரிக்கை விடுத்ததிருந்தனர்.

    இதனை அடுத்து சம்மந்தப்பட்ட ஒரு ஒரு தரப்பினர்கள் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் திரண்டு வந்து அய்யனா ரப்பன் கோவில் பிரதான வாயில் முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து அப்ப பகுதியில் விடிய விடிய பக்தர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    2-வது நாளாக இன்றும் அப்பகுதியில் சாமியான பந்தல் அமைத்து திரளான பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் கூடுதல் எண்ணிக்கை யிலான போலீசார் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். தொடர்ந்து பக்தர்கள் கோவில் பகுதி யில் அமர்ந்து போராட் டத்தில் ஈடுபட்டு வருவதால் அங்கு பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×