தொடர் மழை ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
தொடர் மழை ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
Published on

சேலம்:

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.

கன மழை

குறிப்பாக வாழப்பாடி அருகே உள்ள ஆனைமடுவு, எடப்பாடி பகுதிகளில் நேற்றிரவு 7 மணிக்கு தொடங்கிய மழை 3 மணி நேரம் கன மழையாக கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

இதே போல ஏற்காட்டில் நேற்று மதியம் கன மழை கொட்டியது. இரவிலும் சாரல் மழை நீடித்தது. மழையை தொடர்ந்து ஏற்காட்டில் பனி மூட்டமும் நிலவுவதால் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இதே போல சங்ககிரி, கரியகோவில், வீரகனூர் பகுதிகளிலும் கனமழை பெய்தது. மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

227.7 மி.மீ. மழை

மாவட்டத்தில் அதிக பட்சமாக ஆனைமடுவில் 58 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. எடப்பாடி 52, சங்ககிரி 30, கரியகோவில் 28, ஏற்காடு 24.2, வீரகனூர் 20, காடையாம்பட்டி 6.4, ஆத்தூர் 4, கெங்கவல்லி 2, சேலம் 1.1., பெத்தநாயக்கன்பாளையம் 1, ஓமலூர் 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 227.70 மி.மீ. மழை பெய்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com