search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி தபால் நிலையங்களில்  தேசிய கொடி விற்பனை
    X

    தருமபுரி தபால் நிலையங்களில் தேசிய கொடி விற்பனை

    • தேசிய கொடி விலை ரூபாய் 25 -க்கு விற்கப்படுகிறது.
    • போஸ்ட்மேன் மூலமும் டெலிவரி செய்யப்படும்.

    தருமபுரி,

    தருமபுரி கோட்ட கண்காணிப்பாளர் முனி கிருஷ்ணன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-

    பிரதமர் மோடி சுதந்திர தினவிழா அமுத பெருவிழாவை அனைத்து வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிட்டு கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    அனைவருக்கும் இந்திய தேசிய கொடி எளிதில் கிடைக்கும் பொருட்டு தருமபுரி கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் விற்பனை செய்ய உள்ளோம். இதன் விலை ரூபாய் 25 மட்டுமே. ஜி எஸ் டி கிடையாது.

    தேசிய கொடியை https//www.epostoffice.gov.in என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி ஆன் லைனில் ஆர்டர் செய்யலாம்.

    மேலும் போஸ்ட்மேன் மூலமும் டெலிவரி செய்யப்படும்.

    எனவே மக்கள், நமது தேசிய கொடியை வாங்கி அவரவர் இல்லங்களில், ஏற்றி அமுத பெருவிழாவை இந்திய போஸ்டல் துறையோடு. கொண்டாடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×