என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
குடிபோதையில் வாகனம் ஓட்டிய வழக்குகளில் ரூ.13 கோடி அபராதம் வசூல்
- அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு மையங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
- போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தொகை 'டிஜிட்டல்' முறையில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் போலீசார் வசூலித்து வருகின்றனர்.
சென்னை:
மதுபோதையில் வாகனங்களை ஓட்டிச்செல்பவர்களுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அபராதத்தொகை அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் உடனடியாக செலுத்துவது இல்லை. இவ்வாறு நிலுவையில் உள்ள வழக்குகளின் அபராதத் தொகையை வசூலிப்பதற்காக சென்னையில் 10 இடங்களில் போலீஸ் அழைப்பு மையங்கள் (கால் சென்டர்) இயங்கி வருகிறது.
அபராதம் செலுத்தாத வாகன ஓட்டிகளின் செல்போன் எண்களுக்கு இந்த மையங்கள் மூலம் தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. இதன் மூலம் கடந்த 20-ந்தேதி அன்று ஒரேநாளில் 586 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.60 லட்சத்து 36 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களில் மட்டும் இந்த அழைப்பு மையங்கள் மூலம் நிலுவையில் இருந்த 12 ஆயிரத்து 551 குடிபோதை வழக்குகளுக்கு போலீசார் தீர்வு கண்டுள்ளனர்.
இதன் மூலம் ரூ.12 கோடியே 99 லட்சத்து 8 ஆயிரத்து 600 அபராதத் தொகையாக கிடைத்துள்ளது. தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டும் அபராதத் தொகை செலுத்தாத 371 வாகன ஓட்டிகளின் அசையும் சொத்துகளை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத்தொகை 'டிஜிட்டல்' முறையில் பணமில்லா பரிவர்த்தனை முறையில் போலீசார் வசூலித்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 4 மாதங்களில் நிலுவையில் இருந்த 1 லட்சத்து 63 ஆயிரத்து 318 போக்குவரத்து விதிமீறல் வழக்குகளுக்கு போலீசார் தீர்வு கண்டு ரூ.6 கோடியே 78 லட்சத்து 69 ஆயிரத்து 540 அபராதத்தொகை வசூலித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையை போலீசார் துன்புறுத்தலாகக் கருதக்கூடாது. விழிப்புணர்வாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்