search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
    X

    சைக்கிள் பேரணியை டி.எஸ்.பி ஹரிசங்கரி கொடி அசைத்து தொடங்கி வைத்த காட்சி.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

    • அரசு மாதிரி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி போதைப் பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.
    • முன்னதாக, சாலை விதி மீறுதல், போதை பொருள்கள் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில், அரசு மாதிரி ஆண்கள் மேல்நி லைப்பள்ளி போதைப் பொருள் தடுப்பு மன்றத்தின் சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரசார சைக்கிள் பேரணி மற்றும் கருத்தரங்கு நேற்று நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் ரவிசங்கர் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலைஞர்புகழ் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் குணாளன், கோபிநாத், தில்லையம்பலம், முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி பேரணியை தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேருந்து நிலையம், தபால் நிலையம், அரசு மருத்துவமனை வரை சைக்கிளில் பேரணி

    யாக சென்று பொதுமக்களி டையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    முன்னதாக, சாலை விதி மீறுதல், போதை பொருள்கள் உபயோகித்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்களின் நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில், வாழப்பாடி உதவி காவல் ஆய்வாளர்கள் கார்த்திக், சேட்டு, வீராங்கண்ணு, முகிலரசன், தலைமைக் காவலர் முருகன் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு

    களை, பள்ளி போதைப்பொ

    ருள் தடுப்பு மன்ற பொறுப்பா சிரியர் முனிரத்தினம், சாலை பாதுகாப்பு மன்ற

    பொறுப்பாசிரியர் சீனிவாசன், உடற்கல்வி இயக்குனர் குமார், ஆசிரியர்கள் பழனி முருகன், ராமமூர்த்தி, முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×