என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
கோத்தகிரியில் நடைபாதையில் நிற்கும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்
By
மாலை மலர்3 Aug 2023 9:19 AM GMT

- பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
- போலீசார் நடைமேடையில் வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.
கோத்தகிரி,
கோத்தகிரி காந்தி மைதானம்-ராம்சந்த் ரோட்டில் இடது புறம் லாரிகள் நிறுத்தும் இடமாகவும், வலது பக்கம் நடைமேடையும் உள்ளது. இது மிகவும் குறுகலான சாலை. எனவே வாகனங்கள் சிரமப்பட்டு சென்று வருகின்றன.
காந்தி மைதானம்-ராம்சந்த் சாலையில் காலை, மாலை வேளைகளில் போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பலர் நடை மேடையில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர்.
இதனால் அங்கு பொதுமக்கள் நடக்க முடியாமல் நடுரோட்டில் இறங்கி செல்ல வேண்டி உள்ளது. எனவே பள்ளி குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே போக்குவரத்து போலீசார் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு நடைமேடையில் வாகனம் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
