சின்னமனூா் அருகே பணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் உள்ள 7 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டதையடுத்து திட்டப் பணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
திட்டபணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.
திட்டபணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.
Published on

சின்னமனூர்:

சின்னமனூா் அருகே சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் உள்ள 7 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தர அந்தப் பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்த னர்.

இதையடுத்து, 15-வது நிதிக்குழு மேம்பாட்டுத் திட்டம் மூலம் ரூ. 4.90 லட்சம் மதிப்பில் பேவா பிளாக், சிமென்ட் சாலை, ரூ.10 லட்சம் மதிப்பில் சாக்கடை கால்வாய், பேவர் பிளாக் சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், ஒரு சில இடங்களில் ஆக்கிரமிப்பு காரணமாக திட்டப் பணிகளை மே ற்கொள்ள முடியவில்லை.

இந்த நிலையில், திட்டப் பணிகளுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதை யடுத்து சின்னஓவுலா புரத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கள் அகற்றப்பட்டன.

இதேபோல இந்திரா நகர் குடியிருப்புப் பகுதியில் அரசுப் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து, தெருவின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த முள் தடுப்பு வேலியும் அகற்றப்ப ட்டது. அப்போது சின்ன மனூர் ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com