ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் மீனவர்களுக்கு குளிர்பதன பெட்டி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடர்ந்து சமுதாய வளர்ச்சி பணிகளை செய்து வருகிறதுகடந்த மாதம் சில்லறை மீன் வியாபாரம் செய்து வரும் மீனவர்களுக்கு மீன் விற்பனைக்கு தேவையான பெட்டிகள் வழங்கப்பட்டன.
குளிர்பதன பெட்டிகளை மீனவர்களுக்கு  வழங்கப்பட்ட போது எடுத்த படம்
குளிர்பதன பெட்டிகளை மீனவர்களுக்கு வழங்கப்பட்ட போது எடுத்த படம்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தொடர்ந்து சமுதாய வளர்ச்சி பணிகளை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மீனவர்களின் வாழ்க்கை தரம் முன்னேற்றத்திற்காக பல்வேறு உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது.

கடந்த மாதம் சில்லறை மீன் வியாபாரம் செய்து வரும் மீனவர்களுக்கு மீன் விற்பனைக்கு தேவையான பெட்டிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மீனவர்களின் தேவைகளுக்கேற்ப உதவிகள் செய்யப்படும் என தெரிவித்த இந்நிறுவனம் தற்போது திரேஸ்புரம்,லூர்தம்மாள்புரம்,அண்ணா காலனி உள்ளிட்ட மீனவ பகுதிகளை சார்ந்தவர்களுக்கு நாட்டுப்படகில் சென்று மீன்பிடிக்கும் போது மீன்களை சேகரித்து வைக்க தேவையான குளிர் பதன பெட்டிகள் 27 மீனவர்களுக்கு வழங்கப்பட்டது.இறால் மீன்பிடி சங்க செயலாளர் சம்சுதீன், பொருளாளர் யாசீர், ஸ்டெர்லைட் காப்பர் முதன்மை நிதி அலுவலர் ஆனந்த் சோனி ஆகியோர் மீனவர்களுக்கு இந்த குளிர் பதன பெட்டிகளை வழங்கினார்கள். குளிர் பதன பெட்டிகளை பெற்ற மீனவர்கள் மகிழ்ச்சியுடன் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com