அடி பம்பு அகற்றாமல் அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய்

குடிநீரோடு கலக்கும் அபாயம் உள்ளது அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கவன குறைவால் நடந்துள்ளது
அடி பம்பு அகற்றாமல் அமைக்கப்பட்ட கழிவு நீர் கால்வாய்
Published on

ஆற்காடு:

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அயிலம் ஊராட்சி, கவரபாளையம் பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக அரசு சார்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது.

இதில் கட்டி முடிக்கப்பட்ட கால்வாய் நடுவே குடிநீர் அடி பம்பு உள்ளது. குடிநீர் அடி பம்புவை அகற்றாமல் இருப்பதால் கழிவுநீர், குடிநீரோடு கலக்கும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்களின் கவன குறைவாலே இந்த தவறு நடந்துள்ளது என அந்த பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அடி பம்பு அகற்றாமல் கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com