என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஊராட்சி மன்ற கட்டிடத்தை வேறு இடத்திற்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மறியல்
நெமிலி:
பாணாவரம் அடுத்த தப்பூர் பகுதியில் ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்பட்டு வந்தது. கட்டிடம் பழுதானதால் அதனை கோவிந்தாங்கள் பகுதியில் கட்டப்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தப்பூர் கிராம மக்கள் வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ்சை சிறைபிடித்து ஆயில் அன்வர்திக்கான் பேட்டைசாலையில் இன்று காலை 7 மணி அளவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாணாவரம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் கூறும்போது ஊராட்சி மன்ற கட்டிடம் வேறு இடத்திற்கு மாற்றக்கூடாது என்று ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து அதிகாரிகள் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் சாலை மறியலில் ஈடுபட்டோம் என தெரிவித்தனர். இந்த மறியலால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்