

அரக்கோணம்:
அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான போலீசார் மோசூர் ரோடு, ஷா நகர், குறிஞ்சி நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஷா நகர் சுடுகாடு அருகே சந்தேகிக்கும் வகை யில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், குறிஞ்சி நகரை சேர்ந்த மோசஸ் (வயது 26) என்பதும், கஞ்சா, வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் மோசஸ்சை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.