search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அய்யப்பன் கோவிலில் படி பூஜை
    X

    அய்யப்பன் கோவிலில் படி பூஜை

    • ஜோதி தரிசனம் காட்டப்பட்டது
    • எராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த, கீழ்வீதி கிராமத்தில் ஸ்ரீ அய்யப்ப சுவாமிக்கு 10-ம் ஆண்டு திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது.

    இக்கிராமத்தில் செயல்பட்டுவரும் ஸ்ரீ மணிகண்ட பக்த பஜனை சபாவின் ஏற்பாட்டில் பூஜை நடைபெற்றது.

    விழாவுக்கு சிவா குருசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தி செல்வம் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் ஸ்ரீ அய்யப்பனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மேலும் 18 படிகள் அமைத்து பஜனை குழுவினர் பக்தி பாடல்கள் பாடினார்.

    பின்பு ஜோதி தரிசனம் காட்டும்போது சுவாமியே சரணம் அய்யப்பா என்று கூறியவறு சாமி தரிசனம் செய்தனர். இதில் விக்டல் குருசாமி, குமார், மதியழகன், வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×