search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலாற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது
    X

    கலெக்டர் வளர்மதியிடம் பா.ம.க.வினர் மனு அளித்த காட்சி.

    பாலாற்றில் மணல் குவாரி அமைக்க கூடாது

    • கலெக்டரிடம், பா.ம.க. வினர் கோரிக்கை மனு
    • பாலாறு பாலைவனமாக மாறும் நிலை உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க.செயலாளர் சரவணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வட தமிழ்நாட்டு மக்களின் வேளாண்மைக்கும் குடிநீர் உள்பட அன்றாட பயன்பாட்டுக்கும் உயிர் ஆதாரமாக பாலாறு இருந்து வருகிறது.

    கோடிக்கணக்கான ஏக்கர் வேளாண்மை நிலங்களும்,பொது மக்களும் பாலாற்றின் நிலத்தடி நீரை நம்பிய வாழ்கின்றனர்.

    இந்நிலையில் மக்களிடம் கருத்து கேட்காமல் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் எசையனூர் மற்றும் வளவனூர் ஆகிய கிராமங்களில் பாலாற்றில் மணல் குவாரிகளை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது.

    அரசு மணல் குவாரி சம்பந்தப்பட்ட அரசு போர்டுகளை எசையனூர் கிராமத்தில் பாலாற்றங்கரையில் வைத்துள்ளனர்.

    பாலாற்றில் மீண்டும் மணல் குவாரிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் பாலாறு பாலைவனமாக மாறும் நிலை உள்ளது.

    எசையனூர் மற்றும் வளவனூர் ஆகிய கிராமங்களில் பாலாற்றில் மணல் குவாரிகளை அமைப்பது எதிர்த்து பா.ம.க சார்பில் கடந்த மாதம் 25ம் தேதி எசையனூர் கிராமத்தில் பாலாற்றில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    மணல் கொள்ளையை தடுத்து நிலத்தடி நீர் வளத்தை காத்து இயற்கை வளங்களை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் எசையனூர் மற்றும் வளவனூர் ஆகிய கிராமங்களில் பாலாற்றில் மணல் குவாரிகளை அமைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×