search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் டிரைவரை தாக்கிய முதியவர் கைது
    X

    அரசு பஸ் டிரைவரை தாக்கிய முதியவர் கைது

    • அரசு பஸ் டிரைவரை தாக்கிய முதியவர் கைது
    • போலீசார் விசாரணை

    சோளிங்கர்:

    சோளிங்கரை அடுத்த தொண்டமான் நத்தம் கிராமத்திலி ருந்து ஆற்காட்டிற்கு அரசு பஸ் சென்றது.

    இந்த பஸ்சை அம்மூரைச் சேர்ந்த பாபு (வயது 43) ஓட்டிச்சென்றார். கேசவன்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே தொண்டமாநத்தத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் பஸ்சுக்கு முன்னால், மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு டிரைவர் பாபு விடம் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி, கையால் அடித்து, பீர் பாட்டிலால் தாக்க முயற்சித்துள்ளார்.

    இதை பாபு தடுத்ததால் பீர் பாட்டில் கீழே விழுந்து உடைந்தது. பின்னர் அவர் பஸ்சில் ஏறி வயரை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளார். இதுகுறித்து டிரைவர் பாபு, சோளிங்கர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து முதியவரை கைது செய்தனர்.

    Next Story
    ×