search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • ஆற்காடு வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடந்தது
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றிய, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் முதல்- அமைச்சரின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியும், காலமுறை ஊதியம், குடும்ப நல ஓய்வூதியம், பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க கோரியும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரியும், மானியத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

    Next Story
    ×