search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்த காட்சி.

    சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்
    • 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், முதல் அமைச்சரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றிட வேண்டும், காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் உடனடியாக நிரப்ப வேண்டும், ஓய்வு பெறும் வயதை 60 -ல் இருந்து 62-ஆக உயர்த்திட வேண்டும், என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மலர் முன்னிலை வகித்தார்.

    ஓய்வூதிய சங்க மாவட்ட செயலாளர் ஜெகதீசன் வாழ்த்துரை வழங்கினார். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் ரவி கலந்து கொண்டு பேசினார்.

    ஆர்பாட்டத்தில் ஒன்றிய தலைவர் பிரவினா, ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தமிழ்செல்வி நன்றி கூறினார்.

    Next Story
    ×