மின்சாரம் தாக்கி பசு மாடு பலி

மின் அதிகாரி விசாரணை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை பிஞ்சி பகுதியில் நேற்று மேய்ச்சலுக்காக பசு மாடு ஒன்று சென்றது.

அப்போது பாரி நகர் விரிவாக்க பகுதியில் மின்சார டிரான்ஸ்பார்மர் அருகே சென்றபோது அறுந்து கிடந்த இருந்த ஒயரை மிதித்தது. மின்சாரம் தாக்கி பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது.

இது குறித்து ராணிப்பேட்டை மின்சார வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் மின்சார வாரியத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com