என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூட்டுறவு வார விழா
    X

    கூட்டுறவு வார விழா நடந்த காட்சி.

    கூட்டுறவு வார விழா

    • மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
    • பொதுமக்கள் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் கூட்டுறவு துறையின் மூலம் 70-வது அனைத்து இந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது.

    ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, 5 ஆயிரத்து 47 பேருக்கு ரூ. 34கோடியே 30 லட்சம் மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளையும், சிறப்பாக செயல்பட்ட 40 கூட்டுறவு சங்கங்களுக்கு பாராட்டு கேடயங்களையும், கூட்டுறவு வார விழாவையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளையும் வழங்கி பேசினார்.

    இதில் ஆற்காடு ஜெ.எல். ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ.முன்னிலை வகித்தார்.

    கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் சிவக்குமார் வரவேற்றார்.

    வேலூர் மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் (பொறுப்பு) முருகேசன் திட்ட விளக்கயுரை யாற்றினார்.

    பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் சிவமணி கூட்டுறவு வார விழா உறுதிமொழியை வாசித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஒன்றிய குழு தலைவர்கள் புவனேஸ்வரி சத்தியநாதன்,அனிதா குப்புசாமி, நகரமன்றத் தலைவர் மேல்விஷாரம் முகமது அமீன், ராணிப்பேட்டை நகர மன்ற துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செல்வம் உள்பட கூட்டுறவு துறை அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மகளிர் குழுவினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×