வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

3 பவுன் நகையை திருடி சென்றனர்போலீசார் விசாரணை
வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை
Published on

அரக்கோணம்:

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கீழ்குப்பம் அமர்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி.

இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். ஈஸ்வரி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார்.

பின்னர் நேற்று சென்னையில் இருந்து அரக்கோணத்திற்கு வந்தார். வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

வீட்டுக்குள் சென்று பார்த்த போது பொருட்கள் சிதறி கிடந்துள்ளது. பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகையை மர்ம கும்பல் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அரக்கோணம் நகர போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரி புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com