அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல்

2 பேருக்கு வலைவீச்சு போலீசார் விசாரணை
Published on

சோளிங்கர்:

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருந்து ஆற்காட் டிற்கு செல்லும் அரசு டவுன் பஸ் கடந்த சில நாட்களாக தகரக்குப்பம் கிராமத்திற்கு சென்று ஆற்காட்டுக்கு செல்கிறது.

நேற்று காலை சோளிங்கரிலிருந்து ஆற்காட்டிற்கு ரெண் டாடி வழியாக சென்று தகர குப்பம் கிராமத்திற்குள் சென்று திரும்பி வந்தது.

அப்போது தகரகுப்பம் பஸ் நிலையம் அரு கில் பஸ்சில் ஏறிய 2 பேர் பஸ் தகரகுப்பம் சென்று வருவதால் எங்களுக்கு இடம் இல்லை என்று டிரைவர் பாஸ்கருடன் (55) தகராறு செய்து அவரை தாக்கி உள்ளனர்.

உடனடியாக சோளிங்கர் பணிமனைக்கு தகவல் கொடுத்து வேறு டிரைவரை பஸ்சை ஓட்டி சோளிங்கர் வரவைத்து சென்றனர்.

பாஸ்கர் சோளிங் கர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் டிரை வர் பாஸ்கர் புகார் கொடுத் தார். அதன்பேரில் சப் - இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com