search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்னல் தாக்கியதில் 3 பள்ளி மாணவர்கள் மயக்கம்
    X

    கோப்புப்படம்

    மின்னல் தாக்கியதில் 3 பள்ளி மாணவர்கள் மயக்கம்

    • இடியுடன் கூடிய கனமழை
    • சிகிச்சை முடிந்து பத்திரமாக வீடு திரும்பினர்

    காவேரிப்பாக்கம்:

    நெமிலி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மதியம் திடீரென்று இடியுடன் கூடிய கனமழை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

    அப்போது சம்பத்துராயன்பேட்டை கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி வளாகத்தில் உள்ள மரத்தின் மீது மின்னல் தாக்கியபோது அவ்வழியே சென்ற 8-ம் வகுப்பு படிக்கும் கோதாவரி, 6 -ம் வகுப்பு படிக்கும் செல்வி, குருபிரசாத் ஆகியோர் கீழே விழுந்து மயக்கமடைந்தனர்.

    இதனை கண்ட பள்ளி ஆசிரியர்கள் 3 பேரையும் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். பின்பு சிகிச்சை முடிந்து 3 பேரும் பத்திரமாக வீடு திரும்பினர்.

    Next Story
    ×