search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இலவச பஸ் பயண திட்டத்தின் கீழ் 2.31 கோடி பெண்கள் பயனடைந்தனர்
    X

    இலவச பஸ் பயண திட்டத்தின் கீழ் 2.31 கோடி பெண்கள் பயனடைந்தனர்

    • ராணிப்பேட்டை கலெக்டர் தகவல்
    • பஸ்சின் முகப்பில் இளஞ்சிவப்பு வண்ணமிட்டு சுலபமாக அடையாளம் கண ஏற்பாடு

    ராணிப்பேட்டை:

    தமிழக முதலமைச்சர் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2.31 கோடி மகளிர்கள் பயனடைந்துள்ளதாக ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் கீழ் சோளிங்கர் பணிமனையில் 14 டவுன் பஸ்களும், ஆற்காடு பணிமனையில் 50 டவுன் பஸ்களும் என மொத்தமாக 64 டவுன் பஸ்களில் மகளிருக்கான கட்டணமில்லா பயணம் என பிரத்யேகமான ஒட்டுவில்லைகளையும் ஒட்டி பஸ்சின் முகப்பில் இளஞ்சிவப்பு வண்ணமிட்டும் பெண்கள் சுலபமாக பஸ்களை அடையாளம் கண்டு பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

    இத்திட்டம் மூலம் தினசரி 48,312 பெண்களும், கடந்த 08.05.2021 முதல் தற்பொழுது வரை 2.31 கோடி மகளிர்கள் மற்றும் 26.000 திருநங்கைகள் நகரப் பஸ்களில் இலவசப் பயண சலுகை பெற்றுள்ளனர் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×