என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புயல் மழையால் 2,243 ஹெக்டேர் பயிர்கள் நாசம்
    X

    புயல் மழையால் 2,243 ஹெக்டேர் பயிர்கள் நாசம்

    • 3,156 விவசாயிகள் பாதிப்பு
    • அதிகாரி தகவல்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பெய்த புயல் மழை காரணமாக 1,912 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நாசமாகின.

    இதனால் 2,814 விவசாயிகள் பாதிப்படைந்தனர். 76 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பருப்பு வகை பயிர்கள் நாசமாகின.

    இதனால் 116 விவசாயிகள் பாதிப்படைந்தனர். 170.91 ஹெக்டேர் பரப்பள வில் பயிரிடப்பட்ட நிலக்கடலை பயிரும் நாசமாகின, 225 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று தினை வகை பயிர்களும் பாதிப்பட்டுள்ளன.

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 2,160 ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட பயிர்கள் நாசமானது.

    மேலும் 24.1 ஹெக்டேர் பரப்பளவில் மிளகாய் பயிர்கள், 31.31 ஹெக்டேர் பரப்பளவில் வாழை மரங்கள், 28.15 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறி பயிர்கள் நாசமாகின ஆக மொத்தம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2,243 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் நாசமானது. 3,259 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×