search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அறிவியல் கண்காட்சி போட்டி
    X

    அறிவியல் கண்காட்சி போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு தாளாளர் டாக்டர் சின்னதுரை அப்துல்லா தலைமையில் பரிசு வழங்கப்பட்டது.

    அறிவியல் கண்காட்சி போட்டி

    • ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி போட்டி நடந்தது.
    • மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கி ணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா நன்றி கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம்செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் தேசிய அளவி லான அறிவியல் கண்காட்சி நிறைவு விழா தாளாளர் டாக்டர் சின்னத்திரை அப்துல்லா தலைமையில் நடந்தது.

    இதில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு அறிவியல் படைப்புகளை கண்காட்சியில் இடம் பெறச் செய்தனர். முதல்வர் பெரியசாமி வரவேற்றார்.

    ராமநாதபுரம் ஜெயம் சாப்ட்டுவேர் சொல்யூசன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சங்கர் கலந்து கொண்டு பேசினர். இதில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான போட்டியில் நேசனல் அகாடமி மாண்டிசோரி பள்ளியை சேர்ந்த மாணவி பூர்விகா, கீர்த்திகா மற்றும் அஸ்மியா பேகம் முதல் பரிசையும், செய்யது அம்மாள் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த அசோகமித்ரன், ஆனந்தலட்சுமி 2-வது பரிசையும், மதுரை தனியார் பள்ளியை சேர்ந்த கிஸ்வர் ஜகான் 3-வது பரிசையும் பெற்றனர்.

    பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பிற்கான போட்டி யில் கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஹிதாயத்துல்லா முதல் பரிசையும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நிலோபர் நிசா 2-வது பரிசையும், செய்யது அம்மாள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சேர்ந்த அகில் பாகீம், சுபாஷ், முகமத்துல் பாஸி, நேஷனல் அகாடமி மாண்டிசோரி பள்ளி மாணவர் நந்து மகேந்திரன், சிவகங்கை மைக்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் சுந்தர வரதன் ஆகியோர் 3-வது பரிசையும் பெற்றனர். நடுவர்களாக வானதி அமலன், நாசர் ஆகியோர் பணியாற்றினர். மின்னியல் மற்றும் மின்னனுவியல் துறையைச் சேர்ந்த ஒருங்கி ணைப்பாளர் சித்தி சமீம் பாத்திமா நன்றி கூறினார்.

    Next Story
    ×