search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை
    X

    மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை

    • மீனவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
    • மீனவர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் அறிவிக்காமல் இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், மனித நேய மக்கள் கட்சி தலைவருமான ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    மண்டபம் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரமான கடல் அட்டை மீதான தடையை நீக்க கோரி ராமநாதபுரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு வீடு திரும்பிய போது வாகன விபத்தில் சிக்கி 4 பேர் பலியானார்கள். 14 பேர் காயமடைந்தனர். சம்பவம் நடந்து 2 நாட்கள் ஆகியும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பலியான மீனவர் குடும்பத்திற்கு எந்த நிவாரணமும் அறிவிக்காமல் இருப்பதாக மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    முதல்-அமைச்சர் இதில் தலையிட்டு காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், பலியானவர்களின் குடும்பத்திற்கு அதிகபட்ச நிவாரணத்தையும் உடனடியாக அறிவிக்க வேண்டும். மேலும் கடல் அட்டை மீதான தடையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×