என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்த விளங்குகிறது-இஸ்ரோ தலைவர் பேச்சு
    X

    விழாவில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசினார்.

    தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்த விளங்குகிறது-இஸ்ரோ தலைவர் பேச்சு

    • தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியா சிறந்த விளங்குகிறது என்று இஸ்ரோ தலைவர் கூறினார்.
    • அப்துல் கலாம் இந்தியாவின் கடைக்கோடி பகுதியில் இருந்து வந்து நாட்டின் உயர்ந்த நிலைக்கு வந்தவர்.

    ராமேசுவரம்

    ராமேசுவரத்தில் இன்று ஏ. பி.ஜே.அப்துல்கலாம் சர்வ தேச அறக்கட்டளை சார்பில் அவரது பிறந்த நாள் விழா நடைபெற்றது. அறக்கட்டளை ஒருங்கி ணைப்பாளர் நசிமா மரைக்காயர் தலைமை வகித்தார். ஜெய்னுலாவுதீன் முன்னிலை வகித்தார். சேக் சலீம் வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் மற்றும் விஞ் ஞானி வெங்கடேஷ் வர சர்மா, சின்னத்துரை அப்துல்லா உள்ளிட்ட வர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேசியதாவது:-

    ஏ.பி.ஜே. அப்துல்கலாம் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு அவரது குடும்பத்துடன் உணவ ருந்தியது மகிழ்ச்சி யாக உள்ளது. அப்துல் கலாம் இந்தியாவின் கடைக்கோடி பகுதியில் இருந்து வந்து நாட்டின் உயர்ந்த நிலைக்கு வந்தவர். நானும் கேரளாவில் மின்சார வசதி கூட இல்லாத இடத்தில் இருந்து வந்து உயர்ந்த இடத்திற்கு வந்துள்ளேன்.

    இந்தியா தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கு கிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக பல்வேறு மாணவ-மாணவிகள் பி.எஸ்.எல்.வி. சந்திராயான் போன்ற ராக்கெட் மாதி ரியை பார்வைக்கு வைத்தி ருந்தனர். அதனை இஸ்ரோ தலைவர் பார்வையிட்டார்.

    Next Story
    ×