search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவனுக்கு பாலியல் தொல்லை விடுதி வார்டன்
    X

    விடுதி வார்டன் ராஜ்குமார்

    மாணவனுக்கு பாலியல் தொல்லை விடுதி வார்டன்

    • பரமக்குடி மாணவனுக்கு பாலியல் தொல்லை விடுதி வார்டனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை கோரிக்கை.
    • மாணவன் உடன்படாததால் அவர், மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கி கடித்து வைத்துள்ளார். இதனால் காயமடைந்த மாணவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோணி கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவர் ஒருவர், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்பட்டு வரும் ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் அங்குள்ள விடுதியில் தங்கி உள்ளார்.

    இந்த நிலையில் ஜெபஸ்டியனுக்கு அங்கு விடுதி வார்டனாக பணிபுரிந்து வரும் ராஜ்குமார் என்பவர் இரவு நேரங்களில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

    இதற்கு மாணவன் உடன்படாததால் அவர், மாணவனை மூர்க்கத்தனமாக தாக்கி கடித்து வைத்துள்ளார். இதனால் காயமடைந்த மாணவர் பரமக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது பற்றி மாணவனின் தந்தை பரமக்குடி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விடுதி வார்டனை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறியதாவது:-

    எனது மகன் பள்ளியில் சேர்ந்த நாள் முதல் விடுதி வார்டன் ராஜ்குமார், மது மற்றும் கஞ்சா போதையில் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த எனது மகன் தற்போது பள்ளி செல்ல மறுத்து வீட்டில் உள்ளார்.

    எனவே எனது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வார்டனிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தி அவரை கைது செய்ய வேண்டும். அவர் மீது பள்ளி நிர்வாகமும், போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×