search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உயிர் கொல்லி ஜெல்லி மீன்களை தொட வேண்டாம்
    X

    உயிர் கொல்லி ஜெல்லி மீன்களை தொட வேண்டாம்

    • உயிர் கொல்லி ஜெல்லி மீன்களை தொட வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்தனர்.
    • மீனவர்களுக்கு உடல்வேதனை, மூச்சு திணறல் ஏற்படும்.

    ராமேசுவரம்

    பாக்நீரினை மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடும் விஷத் தன்மை கொண்டுள்ள நாலு மூலைச் சொறி, குத்துச் சொறி ஜெல்லி மீன்கள் அதிகளவில் கானப்படு கிறது. மீனவர்கள் மீன் பிடிக்கும்போது வலையில் சிக்கிக்கொள்ளும் போது மீன்களுடன் கலந்திருக்கும் இதணை வெறும் கையில் தொடும்போது அது கடும் விஷத்தன்மையை பாய்ச்சி விடும்.

    இதனால் மீனவர்களுக்கு உடல்வேதனை, மூச்சு திணறல் ஏற்படும். உடனே மருத்து வர்களை அணுகி சிகிச்சை பெற வேண்டும். இல்லை யென்றால் பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும். இத னால் மீன வர்கள் வலை யில் சிக்கிக் கொள்ளும் ஜெல்லி மீனவர்களை கையால் தொடமால் விலகி இருக்க வேண்டும் என மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன் ஜெல்லி மீன் தாக்கி சில மீனவர்கள் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப் பிடத்தக்கது.

    Next Story
    ×