search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.டி. ஸ்கேன், ஆய்வகத்தில் ஊழியர் பற்றாக்குறையை போக்க கோரிக்கை
    X

    மாநாட்டையொட்டி நடந்த ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள்.

    சி.டி. ஸ்கேன், ஆய்வகத்தில் ஊழியர் பற்றாக்குறையை போக்க கோரிக்கை

    • முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன், ஆய்வகத்தில் ஊழியர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என விவசாய தொழிலாளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • 100 நாள் வேலையை முறையாக 100 நாட்களும் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வழங்க வேண்டும்.

    முதுகுளத்தூர்,

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் விவசாய தொழிலாளர் மாவட்ட மாநாடு நடந்தது. மாவட்ட தலைவர் கலையரசன் தலைமை தாங்கினார்.

    தாலுகா செயலாளர் அங்குதன் தொடங்கி வைத்தார். மாநிலதுணை தலைவர் வசந்தாமணி உள்ளிட்ட 13 பேர் அடங்கிய புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்பட்டது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா குழு செயலாளர் முருகன் தீர்மானங்களை முன்மொழிந்தார்.மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    100 நாள் வேலையை முறையாக 100 நாட்களும் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வழங்க வேண்டும். வைகை ஆற்றில் வரும் தண்ணீர் வீனாக கடலில் கலக்கிறது. இதை முறைப்படுத்தி பரலை ஆறு, கூத்தன் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வாரி, அனைத்து கண்மாய்கள்- ஊரணிகளுக்கு, குடி நீருக்கு, பாசனத்துக்கு, பயன் பெறும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாயி களுக்கும் தட்டுபாடின்றி யூரியாவும், உரங்களும் வழங்க வேண்டும்.

    முதுகுளத்தூர் புறவழி சாலை வேலையை உடனே தொடங்க வேண்டும். முதுகுளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனையில். சி.டி.ஸ்கேன், ஆய்வகத்தில் உள்ள ஊழியர் பற்றாக்கு றையை உடனே நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×