search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளிகள் மாநாடு
    X

    மாற்றுத்திறனாளிகள் மாநாடு

    • முதுகுளத்தூரில் மாற்றுத்திறனாளிகள் மாநாடு நடந்தது.
    • கலெக்டர், கோட்டாட்சியர் நடத்தும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தின் சார்பாக தாலுகா 3-வது மாநாடு நடந்தது. மயில்சாமி தலைமை தாங்கினார். மதன்குமார் முன்னிலை வகித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தாலுகா செயலாளர் முருகன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ராஜ்குமார், மாடசாமி, அழகர்சாமி, தங்கபாண்டி, முனியசாமி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மாற்றத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    நிறுத்தப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உடனே வழங்க வேண்டும், மாதத்திற்கு உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும், 100 நாள் வேலை திட்டத்தில் 4 மணிநேர சட்ட கூலி ரூ.281-ஐ அனைத்து ஊராட்சிகளில் அமல்படுத்த வேண்டும்.

    கலெக்டர், கோட்டாட்சியர் நடத்தும் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டங்களை முறையாக நடத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×