search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
    X

    தொண்டி மலுங்கு ஒலியுல்லா தர்ஹா திடலில் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகையில் கலந்து கொண்டவர்கள்.

    பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகைக்கு ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
    • 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரம்

    இறைத்தூதர் இபுராகிம் (அலை) தியாகத்தை கொண்டாடும் வகையில் முஸ்லிம் மக்கள் ஆண்டு தோறும் துல்ஹஜ் மாதம் பிறை 10-ல் பக்ரீத் பண்டிகையை தியாகத் திருநாளாக கொண்டாடி வருகின்றனர்.

    இன்று காலை 7 மணிக்கு தக்பீர் முழக்கத்துடன் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 200-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது.

    ராமநாதபுரத்தில் அனைத்து ஜமாத் சார்பில் ராமநாதபுரம் - மதுரை சாலையில் உள்ள ஈதுகா மைதானத்தில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    இதே போல் கீழக்கரையில் உள்ள 13-க்கும் ேமற்பட்ட பள்ளிவாசல்களில் பெரு நாள் சிறப்பு தொழுகை நடந்தது. ஏர்வாடி, பெரிய பட்டினம், ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, ராம நாதபுரம் வெளிப்பட்டினம், பாரதி நகர், தங்கப்பா நகர் மதரஷா, பனைக்குளம், தேவிபட்டினம், இருமேனி, மண்டபம், பாம்பன், தங்கச்சிமடம், ராமேசு வரம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி, அழகன்குளம், பெருங்குளம், சித்தார்கோட்டை உள்பட மாவட்டத்தின் அனைத்து ஜூம்ஆ பள்ளிவாசல் களிலும் பெருநாள் தொழுகை நடந்தது.

    முன்னதாக பள்ளிவாச லில் பேஷ் இமாம்கள் பக்ரீத் பண்டிகையின் சிறப்புகளை பயான் (சொற்பொழிவு) செய்தனர். தொழுகைக்கு பின் உலக மக்களின் அமைதிக்காகவும், மத நல்லிணக்கம் தொடரவும், தண்ணீர் தட்டுப்பாடு நீங்கவும், மழை வேண்டியும் சிறப்பு துவா நடந்தது. தொழுகை முடிந்ததும் உறவினர்களும், நண்பர்களும் ஒரு வருக்கொருவர் கட்டி யணைத்து பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பெண்களுக்கான தொழுகை பெண்கள் பள்ளிவாசல், மதரஸா மற்றும் வீடுகளில் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வீடுகளில் ஆடு, மாடுகள் ஆயிரக்கணக்கில் குர்பானி கொடுக்கப்பட்டு அதன் இறைச்சிகளை உறவினர்க ளுக்கும், ஏழைகளுக்கும் வழங்கினர். மாவட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏராளமான இடங்களில் திறந்த வெளி மைதானத்தில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.

    சொந்த ஊரில் நடை பெறும் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டு குடும்பத்துடன் பெருநாள் கொண்டாட வளைகுடா நாடுகளிலிருந்தும், மலே சியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் ஏராள மானோர் சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் உள்ள மலுங்கு ஒலியுல்லா தர்ஹா வளாகத்திடலில் தியாகத் திருநாளாம் ஹஜ் பெருநாள் பக்ரீத் பண்டிகையையொட்டி இன்று சிறப்பு தொழுகை நடைபெற்றது. ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் தொழுகை நடத்தினர்.முன்னதாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட அனைத்து இஸ்லாமியர்களும் அதிகாலையிலேயே எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து உற்சாகமாக தொழுகைக்கு வந்தனர். தொழுகை முடிந்து ஒருவரையொருவர் கட்டி அனைத்து தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து குர்பானி கொடுக்கப்பட்டது.

    Next Story
    ×