search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேவா் குருபூஜை விழாவில் பங்கேற்க வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
    X

    தேவா் குருபூஜை விழாவில் பங்கேற்க வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

    • தேவா் குருபூஜை விழாவில் பங்கேற்க வருகிற 21-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் தகவல் தெரிவித்தார்.
    • வருகிற 21-ந் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதிக்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது பிறந்தநாள் விழா மற்றும் 60-வது குருபூஜை விழா வருகிற 30-ந் தேதி நடைபெறுவதையொட்டி அஞ்சலி செலுத்த வருபவர்களின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு நேரம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    அந்த வகையில் அதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் வருகிற 21-ந் தேதி மாலை 5.45 மணிக்கு முன்பு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனுமதிக்கான விண்ணப்பத்தை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×