search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    15 தினங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை
    X

    தொண்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றுவது குறித்து கூட்டம் நடைபெற்றது.

    15 தினங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை

    • 15 தினங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையின் மையப்பகுதியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள சாலைகளில் தினமும் நூற்றுக்கணக்கான தனியார் அரசு பயணிகள் வாகனங்களும், ஏராளமான சுற்றுலா வாகனங்களும் செல்கின்றன. இதனால் தொண்டி பகுதிக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    போக்குவரத்து நெரி சலை கட்டுப்படுத்து வதற்கும், இச்சாலையில் உள்ள வணிக நிறுவ னங்களால் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும் கட்டாயமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றுவது மற்றும் பிளாஸ்டிக் உபயோகத்தை கட்டுப்படுத்தவும் திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன் தலைமையில் ஆேலாசனை கூட்டம் நடந்தது.

    தொண்டி முதல் நிலை பேரூராட்சி மன்ற தலைவர் ஷாஜஹான் பானு ஜவஹர் அலிகான், தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சவுந்திர பாண்டியன் முன்னிலை வகித்தனர். வர்த்தக சங்க, வணிகர் நலச்சங்க பிரதிநிதிகள் தனியார் வாகன ஓட்டுநர் சங்க பிரதிநிதிகள் மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.

    இக்கூட்டத்தில் வணிக நிறுவனங்கள் சாலைகளில் உள்ள தங்களது ஆக்கிர மிப்புகளை தாங்களாகவே 15 தினத்திற்குள் அகற்றிட வேண்டும். தவறும் பட்சத்தில் வருகிற 26-ந் தேதி நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி துறை மற்றும் வருவாய்துறையினர் காவல் துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என முடிவு எடுக்கப்பட்டது. பேரூராட்சி இளநிலை உதவியாளர் ரவிச்சந்திரன் உட்பட வார்டு கவுன்சிலர்கள், நெடுஞ்சாலை, வருவாய்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×