search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் பேரணி
    X

    பாளை வ.உ.சி. மைதானத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றபோது எடுத்தபடம்.

    அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி பள்ளிக்கல்வித்துறை சார்பில் பேரணி

    • பேரணி வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்றது.
    • பேரணியில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, பாளை தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    நெல்லை:

    முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.

    இதனை முன்னிட்டு நெல்லை மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில் இளைஞர் எழுச்சி தின பேரணி பாளை வ.உ. சி. மைதானம் முன்பு இன்று தொடங்கியது.

    பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சின்னராசு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சிவராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் உதவியாளர்கள் ஹரிராமா, பெர்னாட் ராஜா, நாட்டு நலப்பணி திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ஆறுமுகசாமி, ம.தி.தா பள்ளி ஆசிரியர் சோமு உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    பேரணி வ.உ.சி. மைதானம் முன்பு தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று பாளை பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது.இந்தப் பேரணியில் மேலப்பாளையம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், பாளை தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை நாட்டு நலப் பணித்திட்டம் செய்திருந்தது.

    Next Story
    ×