search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நிலையில் மூட்டைகள்
    X

    ஆலங்குளம் அருகே அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நிலையில் மூட்டைகள்

    • கடந்த ஒரு வார காலமாக இந்த நெல் மூட்டைகள் மேல்புறம் தார்ப்பாயின்றி காணப்பட்ட நிலையில் உள்ளது.
    • இதனால் இப்பகுதியில் பெய்த மழையினால் நெல்மூட்டை கள் பல நனைந்து நாசமாகி உள்ளது.

    கடையம்:

    கடையம் யூனியனுக்குட் பட்டது ஐந்தாங்கட்டளை கிராமம். ஆலங்குளம் தாலுகா விற்குட்பட்ட இக்கிராமத்தின் தென்புறமாக அமைந்துள்ள பரும்பு பகுதியில் அரசு நெல் கொள்முதல் நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுற்றுவட்டார பகுதியில் நெல்மூட்டைகளை வாங்கி இந்த கொள்முதல் நிலையத்தில் பணியாளர் மூலம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக இந்த நெல் மூட்டைகள் மேல்புறம் தார்ப்பாயின்றி காணப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதியில் பெய்த மழையினால் நெல்மூட்டை கள் பல நனைந்து நாசமாகி உள்ளது. மேலும் பல நெல் மூட்டைகள் முளைத்த நிலையில் காணப்படுகின்றன.

    இதையடுத்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதிகாரிகளின் கண்டுகொள்ளாத நிலையால் பல நெல் மூட்டைகள் சேதமடைந்த நிலையில் உள்ளதால், உயர் அதிகாரிகள் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டு என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

    Next Story
    ×