search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர்
    X

    கிணற்றில் பிணமாக கிடந்த வாலிபர்

    • கிணற்றில் பிணமாக வாலிபர் பிணமாக கிடந்தார்
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை

    புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் பரமசிவம் மகன் ராகுல் (வயது 26). இவர் கனடாவில் எம்.பி.ஏ. படித்து வந்தார். இந்நிலையில் இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விடுமுறையில் புதுக்கோட்டைக்கு வந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் ஆலங்குடி நகரில் உள்ள அவரது பாட்டி நடேசன் மனைவி மங்களம் வீட்டிற்கு நேற்றுமுன்தினம் மாலை வந்தார். பின்னர் வீட்டில் ராகுல் தூங்கினார். இந்நிலையில் நேற்று காலையில் மங்களம் எழுந்து ராகுலை தேடிய போது அவரை காணவில்லை. அப்போது வீட்டில் உள்ள கிணற்றில் பார்த்த போது, ராகுல் பிணமாக கிடந்தார். இதைப்பார்த்த மங்களம் கதறி அழுதார். இவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்தனர். பின்னர் அவர்கள் ஆலங்குடி போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி ராகுலின் உடலை மீட்டு வெளிேய கொண்டு வந்தனர். பின்னர் பிேரத பரிசோதனைக்காக ராகுல் உடலை போலீசார் புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×