search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டையில்  சிறுதானியங்கள் உணவு கண்காட்சி -  கலெக்டர் தலைமையில் நாளை நடைபெறுகிறது
    X

    புதுக்கோட்டையில் சிறுதானியங்கள் உணவு கண்காட்சி - கலெக்டர் தலைமையில் நாளை நடைபெறுகிறது

    • ஐக்கிய நாடுகள் சபையினால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. ,
    • புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 29-ந்தேதி காலை 11 மணிக்கு சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது.

    புதுக்கோட்டை,

    ஐக்கிய நாடுகள் சபையினால் 2023-ம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுமக்களிடையே பாரம்பரிய குணமான சிறுதானியங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை 29-ந்தேதி காலை 11 மணிக்கு சிறுதானிய உணவு திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெறும் இக்கண்காட்சியில் சிறு தானிய உணவின் நன்மைகள், பலன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி நடைபெறும். இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

    அரசு துறைகள், சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் செயல்படும் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஆகிய அமைப்பு களால் சிறுதானிய உணவு வகைகள் காட்சிப்ப டுத்தப்பட உள்ளது. இதில் முதல் மூன்று இடத்திற்கான தேர்வாளர்களை தேர்ந்தெடுத்து பரிசு தொகையும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×