search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வழுக்கு மரம் ஏறும்  போட்டி
    X

    வழுக்கு மரம் ஏறும் போட்டி

    • வடகாடு-மாங்காடு ஏவி பாய்ஸ் அணியினர் முதல் பரிசு
    • வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆலங்குடி பகுதிகளில் பல்வே று கிராமங்களில் வழுக்கு மரம் ஏறும் போட்டி பாரம்பரியமாக நடத்த ப்பட்டு வருவ து வழக்கம். அதன்படி நேற்று பொங்கல் விழாவை முன் னிட்டு மாங் காடு கிராமத் தில் அப்பகுதி இளைஞர்களால் நடத்தப்ப ட்ட வழுக்கு மரம் ஏறும் போட்டியில் சுமார் 40 அடி உயரம் கொண்ட கிரீ ஸ்,விளக் கெண்ணெய், சோற்றுக்கற்றாழை மற்றும் வழுக்கும் தன் மை கொண்ட எண்ணெய்கள் ஊற்றப்பட்ட மரம் போட்டிக்காக அமை க்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் ஒரு குழுவுக்கு ஐந்து பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில் மிகுந்த பார்வையாளர்களின் உற்சாகத்தோடு வடகாடு-மாங்காடு ஏவி பாய்ஸ் அணியினர் வெற்றி பெற்று 5000 ரூபாய் பரிசை வென்றனர்.

    Next Story
    ×