

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே குளமங்கலம் வடக்கு ஊராட்சியில் ஊரக வேலை உறுதித் திட்ட பணியாளர்களின் பணி அட்டை புதுப்பிக்கப்பட்டு, பட்டியல் வெளியிடப்பட்டது. அந்த பட்டியலில் 60 பேரின் பெயர்கள் இல்லை என கூறப்படுகிறது. இதை கண்டித்தும், விடுபட்டடோரை பட்டியலில் இணைக்க வேண்டும் என வலியுறுத்தியும், குளமங்கலம் வடக்கு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஊராக வேலை உறுதித் திட்ட பணியாளர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.