என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தெப்ப திருவிழா
- ஆலங்குடி அருகே குளமங்கலம் அய்யனார் கோவில் நடைபெற்றது
- ஜொலி, ஜொலிக்கும் வர்ண விளக்குகளில் வலம் வந்த தெப்பத்தை கண்டு பக்தர்கள் பரவசம்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் குளமங்கலம் பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசி மகத் திருவிழா தொடங்கியது.குளமங்கலம் பெருங்காயைடி மீண்ட அய்யனார் கோவிலில் மாசிமக நாளில் நடைபெறும் திருவிழாவில்கோவில் முன்பு உள்ள 33 அடி உயரமுள்ள குதிரை சிலைக்கு அதன் உயரத்திலேயே பொதுமக்கள் பூ மற்றும் காகித மாலைகளை அணிவித்து வழிபடுவது வழக்கம்.நடப்பாண்டு விழாவைெயாட்டி கிராம மக்களின் சார்பில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து குதிரை சிலைக்காக தயாரிக்கப்பட்ட நீளமான வேட்டி, துண்டு, பச்சை நிற வஸ்திரம் ஆகியற்றை கயிறு மூலம் கட்டி குதிரை சிலைக்கு அணிவித்தனர்.தொடர்ந்து சிலைக்கு மாலை அணிவிக்க பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து புதுக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கார், வேன், சுமை ஆட்டோ, லாரி, டிராக்டர்களில் பூ மற்றும் காகித மாலைகளை எடுத்து வந்து, கோவிலின் இருபுறச்சாலையிலும் பல கி.மீ. தொலைவுக்கு காத்திருந்து குதிரை சிலைக்கு 2,500க்கும் மேற்பட்ட மாலைகள் அணிவித்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.இந்நிலையில் அருகே உள்ள பெரிய குளத்தில் தெப்பம் அமைக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சுவாமிகள் அலங்காரத்துடன் அமர வைக்கப்பட்டு மேளதாளங்களுடன் தெப்பம் இழுக்கப்பட்டது. பின்னர் உற்சவ ரத்தத்திலிருந்து ஆலயத்திற்கு கொண்டு வந்து வைத்தனர்.இதனை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்