search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதுக்கோட்டை 6வது புத்தகத் திருவிழா
    X

    புதுக்கோட்டை 6வது புத்தகத் திருவிழா

    • புதுக்கோட்டை 6வது புத்தகத் திருவிழாவில் 112 அரங்குகளில், 3 லட்சம் புத்தகங்கள்
    • அமைச்சர் மெய்யநாதன் தகவல்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை நகர மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழல் மற்றும்காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, இந்த புத்தக திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 75 பதிப்பகங்களிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுஅறிவு, அறிவியல், அரசியல், கவிதைகள், வரலாறுகள் உள்ளிட்ட எண்ணற்றத் தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் கிடைக்கப்பெறுகின்றன. 112 அரங்குகளில் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக திருவிழா ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்சின்னத்துரை, வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், ஒருங்கிணைப்பாளர்தங்கம்மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்செந்தாமரை பாலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×