என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
புதுக்கோட்டை 6வது புத்தகத் திருவிழா
- புதுக்கோட்டை 6வது புத்தகத் திருவிழாவில் 112 அரங்குகளில், 3 லட்சம் புத்தகங்கள்
- அமைச்சர் மெய்யநாதன் தகவல்
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை நகர மன்றத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 6வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் சுற்றுச்சூழல் மற்றும்காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு, பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, இந்த புத்தக திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 75 பதிப்பகங்களிலிருந்து சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுஅறிவு, அறிவியல், அரசியல், கவிதைகள், வரலாறுகள் உள்ளிட்ட எண்ணற்றத் தலைப்புகளின்கீழ் புத்தகங்கள் கிடைக்கப்பெறுகின்றன. 112 அரங்குகளில் இதற்காக அமைக்கப்பட்டு உள்ளது. இந்த புத்தக திருவிழா ஆகஸ்ட் 6ம் தேதி வரை நடைபெறும் என்று அவர் தெரிவித்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்சின்னத்துரை, வருவாய் கோட்டாட்சியர்முருகேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், ஒருங்கிணைப்பாளர்தங்கம்மூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்செந்தாமரை பாலு, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்