சிவன் கோவில்களில் பிரதோஷ விழா

9 வகையான திரவிய பொடிகளில் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன
சிவன் கோவில்களில் பிரதோஷ விழா
Published on

ஆலங்குடி,

ஆலங்குடி அருகே உள்ள திருவரங்குளத்தில் பெரியநாயகி அம்பா ள் பிரசித்தி பெற்ற உடனுறை அரங்குள நாதர் கோவிலில் தை மாத பிரதோஷத்தை யொட்டி சிவன் சன்னதியில் உள்ள நந்திக்கு பால், தயிர், சந்த னம் உள்ளிட்ட 9 வகையான திர வியங்களால் அபிஷேகம் நடைபெற்றதுபின்னர் மூலஸ்தானத் தில் உள்ள சுயம்புலிங்க சிவபெரு மான், பெ ரியநாயகி அம்பாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட் டது. பின்னர் சிவபெருமானை காளை வாகனத்தில் எழுந்தருள செய்து 3 முறை கோவில் பிரகா ரத்தில் பக்தர்கள் உலா வந்தனர்.இதேபோல் காசிக்கு வீசம் கூட என்று அழைக்கப்படும் திருவிளை யாட்பட்டி திருமூலநாதர்- திரிபுரசுந்தரி அம்பாள் கோவில், திருக்கட்ட ளை சோமசுந்த ரேஸ்வரர்-மங்களநாயகி அம்பாள் கோவில், திரும லை ராய சமுத்திரம் கதிர்காமேஸ்வரர்- கதிர்காமேஸ்வரி அம்பாள் கோவில், பாலையூர் கலங்கரை புராதன ஈஸ்வரர் கோவில், விஜய ரெகுநாதபுரம் சிவன் கோவில்களில் பிரதோஷ விழா வையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது,

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com