என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
- தனிப்படை போலீசாரிடம் சிக்கினார்
- காபி கடையில் விற்பனை
ஆலங்குடி.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வடகாடு பகுதியில் லாட்டரி சீட்டு விற்பதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தனிப்ப டை போலீசார் அமைத்து அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்..அப்போது வடகாடு கரம்பக்காடு பகுதியை சேர்ந்த கருப்பையா மக ன் நீலகண்டன் (வயது 43 )இவர் கைகாட்டி அருகில் ஒரு காபி கடையி ல் ஆன்லைன் லாட்டரி சீட்டு வைத்து விற்றுள்ளார்.அப்போது சோதனையில் ஈடுபட்ட போலீசார் அவரிடமிருந்து மூன்று இலக்கு ஆன்லைன் லாட்டரி சீட்டு பதுக்கிவைத்திருந்ததை கைப்பற் றி கைது செய்தனர்.பின்னர் வடநாடு போலீசாரிடம் ஒப்படைத்தனர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து விசா ரித்து வருகிறார்.
Next Story






