search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்முப்பட்டியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்
    X

    கும்முப்பட்டியில் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம்

    • தமிழக முதலமைச்சர் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது
    • புதுக்கோட்டை மாவட்டம் முள்ளூர் பஞ்சாயத்து கும்முப்பட்டியில் நடைபெற்ற மருத்துவமுகாமில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

    புதுக்கோட்டை,

    முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம், டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின்நிர்வாக இயக்குநர் டாக்டர்.கே.எச்.சலீம் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம், முள்ளுர் பஞ்சாயத்து, கும்முப்பட்டி கிராமத்திலுள்ள சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற இந்த முகாமிற்கு கும்முப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் முன்னிலை வகித்தனர். இம்மருத்துவ முகாமில், தொற்றா நோய்களான சர்க்கரை நோய், இருதய நோய், புற்றுநோய், ஆஸ்துமா நோய் மற்றும் பல்வேறு நோய்கள் பற்றிய விழிப்புணர்வும், நோய் கண்டறியும் பரிசோதனையும்செய்யப்பட்டன.தொற்றும் நோய்களால் தொற்று பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை பற்றியும், கொரோனா, டெங்கு, பன்றிக்காய்ச்சல், இன்ஃபுளுயன்சா போன்ற வைரஸ் காய்ச்சலால் ஏற்படும் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளை அணுகி பரிசோதனை செய்துகொண்டு முறையாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்றும்முகாமில் அறிவுறுத்தப்பட்டது. டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இருக்கை மருத்துவர்அறிவரசு அனைவருக்கும் பரிசோதனையும் ஆலோசனையும் வழங்கினார். முகாமில் இரத்த அழுத்தம், உயரம், எடை, வெப்பத்தின் அளவு, இரத்த சர்க்கரை அளவு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.இம்முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். முகாம் ஏற்பாடுகளை டீம் மருத்துவமனையின் பொது மேலாளர் ஜோசப், செவிலியர் கண்காணிப்பாளர் பத்மாவதி ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

    Next Story
    ×