என் மலர்
உள்ளூர் செய்திகள்

கந்தர்வகோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா
- கந்தர்வகோட்டையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது
- விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள், சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் அமைந்துள்ள விநாயகர் ஆலயங்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகருக்கு அருகம்புல் மாலை தொடுத்தும், கொழுக்கட்டை, சுண்டல் படைத்தும் வழிபட்டுச் சென்றனர். மேலும் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் கரைக்கும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கந்தர்வகோட்டை பெரிய கடை வீதியில் உள்ள ராஜகணபதிக்கு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
Next Story