ஆலங்குடியில் கலையரங்கம் இடிப்பு

ஆலங்குடியில் கலையரங்கம் இடிக்கப்பட்டது 1973 -ம் ஆண்டு கட்டப்பட்டது
ஆலங்குடியில் கலையரங்கம் இடிப்பு
Published on

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் கடந்த 1973 -ம் ஆண்டு கட்டப்பட்ட கலையரங்கத்தில், அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், பல்வேறு முன்னணி நடிகர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியுள்ளனர். இந்நிலையில் ஆலங்குடியின் அடையாளமாக திகழ்ந்த இந்த கலையரங்கம் சிதிலமடைந்ததால் அதிகாரிகளின் வழிகாட்டல்படி பேரூராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள். இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், ஆலங்குடிக்கு ஒரு அடையாளம் என்றால் அது கலையரங்கம்தான். அந்த கலையரங்கத்தை சொன்னாலோ ஆலங்குடி நினைவிற்கு வரும். இந்த கலையரங்கத்தால் நாங்கள் ஜெயலலிதா உள்ளிட்ட பல தலைவர்களை நேரில் பார்க்க நேர்ந்தது. தற்போது இந்த கலையரங்கம் இடித்து தரைமட்ட மாக்கப்்பட்டுள்ளதை பார்க்கும் போது மனது கஷ்டமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com