search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

    • 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியை அதிக படுத்த கோரிக்கை
    • கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது

    கந்தர்வகோட்டை,

    கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் அருகே தமிழ் மாநில விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். 100 நாள் வேலை திட்டத்திற்கான நிதியை அதிகப்படுத்த கோரியும், வேலை அடையாள அட்டை உள்ள அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க கோரியும், பணித்தளத்திற்கு வருவதை காலை 9 மணியாக மாற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் அம்பலராசு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ராஜேந்திரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலியபெருமாள், சாமி கண்ணு, முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×