அதானி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்

பாராளுமன்ற கூட்டு குழு ஆய்வு செய்ய வலியறுத்தல் கார்த்தி சிதம்பரம் எம்.பி. பேட்டி
அதானி கணக்குகளை ஆய்வு செய்ய வேண்டும்
Published on

ஆலங்குடி, 

புதுக்கோட்டை மாவ ட்டம் கொத்தக்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியா ளர்களிடம், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் பேசும்போது, தி.மு.க. தலைமை மற்றும் கூட்டணி கட்சிகள் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் எதிரொலியாக ஈரோடு இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி எதிர்பார்த்ததுதான் ஐம்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்கள் என்று முன்பே கூறியிருந்தேன்.2021 ஆம் ஆண்டு காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெற்ற தொகுதி என்பதால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. மு.க.ஸ்டா லின் முதல்-அமைச்சரான பிறகு நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால் அனைத்து அமைச்சர்களும் தங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்க தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கென்று ஒரு இலக்கணம் உள்ளது. அதானியின் பங்கு சரிவினால் பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள் மற்றும் எல்ஐசி நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. எனவே இது குறித்து கூட்டு பாராளுமன்ற குழு அமைத்து அதானியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்து விசாரணை செய்ய வேண்டும் என்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com