மது விற்ற வாலிபர் கைது

மது விற்ற வாலிபர் கைது செய்யபட்டார் 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யபட்டது
மது விற்ற வாலிபர் கைது
Published on

ஆலங்குடி:

அறந்தாங்கி சாலை அருகில் மது பாட்டில் வாங்கி பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ஆலங்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்றுக் கொண்டிருந்த தெற்கு பாத்தம்பட்டியை சேர்ந்த சிவசாமி மகன் ஆனந்தனை (வயது 23) கைது செய்து அவரிடமிருந்து 27 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com